துணிவுள்ள இடத்திலே நேர்மை நிளவும்... - ஒரு நாட்டின் தளபதி இறந்து போனார். அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜா பல இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார். பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் ஜெயிப்பவன் தளபதியாவான். அது மட்டுமின்றி ஒரு மூட்டை பொற்காசும் அவனுக்குப் பரிசுப் பொருளாக வழங்கப்படும். இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பாகவே இருவரும் வரவழைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தனித் தனியாகத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அதிகாலையிலேயே போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதால் நேரத்துடனேயே உணவருந்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவனின் அறைக்குள் தலைமை சமையல்காரன் திடீரென்று நுழைந்தான். அவனிடம் ரகசியமான குரலில், "தம்பி... நாளை நடக்கும் போட்டியில் நீ மட்டுமே கலந்து கொள்ளப் போகிறாய். எனவே போட்டியே இல்லாமல் நீதான் ஜெயிப்பாய்" என்றான். அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. சமையல்காரன் மீண்டும் சொன்னான். "இதோ பார். நான் பக்கத்து அறையிலுள்ள உன் போட்டியாளனுடைய உணவில் தூக்கத்திற்கான மருந்தைக் கலந்து விடுவேன். அவனால் காலையில் எழுந்திருக்
அனைத்து சிக்கலுக்கும் ஒரே வைத்தியம்.. - அப்பாவிடம் எல்லாவற்றிற்குமே ஒரே வைத்தியம் தான் இருக்கும். உங்களுக்கு எவ்வளவு பெரிய வியாதியாக இருந்தாலும் அவர் இதைத்தான் சொல்வார். இதை மட்டும்தான் சொல்வார்."தலகாணி இல்லாம வெறும்தரைல படு, சரியாகிடும்"உலகின் அத்தனை வலிகளுக்கும் சர்வலோக நிவாரணி இந்த ஒன்றைத்தவிர வேறேதும் இல்லையென்பது அவரின் ஆணித்தரமான நம்பிக்கை. இதன் விசித்திரம் என்னவெனில் உடம்பிற்கு மட்டுமல்ல, மனதிற்குமான வைத்தியமாகவும் அவர் இதைத்தான் பரிந்துரைப்பார்.மனைவியை இழந்த எதிர்வீட்டு முதியவரின் புலம்பலுக்கு "வெறும் தரைல படுங்க, பாரம் குறையும்" என்று ஜஸ்ட் லைக் தட் அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது தான் இதை கவனிக்க ஆரம்பித்ததாக ஞாபகம்.பின்னொரு நாளில், கடன் தொல்லையென விரக்தியாய் புலம்பிய உறவினனுக்கு, வேலைப்பளுவென எரிந்து விழுந்த நண்பனுக்கு என பட்டியல் சன்னமாய் நீளும்.பின் எப்போதாவது "தலகாணி வேண்டாம் இந்துமா, கொஞ்ச நேரம் இப்டி படுத்துக்குறேன், அம்மாகிட்ட டீ போட சொல்லு" என்றபடி படுத்துக்கொள்வார். ஏதோ புரிந்ததுபோல் இருக்கும்."முதுகுவலி, தலைவலிக்குப் பரவாயில்ல, மன