முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரிய கற்கள்

 


பெரிய கற்கள்...  - வகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப்பாடங்கள் எடுக்க வந்த ஒரு பேராசிரியர். ''மாணவர்களே, இன்று நாம் செய்முறைவிளக்கத்துட‎ன் ஒரு பாடத்தைக் கற்போம்.''


வாய்ப்புறம் அகலமாய் இருந்த, ஒளி ஊடுருவக்கூடிய ஒரு பெரிய பிளாஸ்டிக் ஜாடியை எடுத்து வரச்செய்தார் பேராசிரியர். ஜாடி ஒரு மேஜையி‎ன் மீதுவைக்கப்படுகிறது. ஏழெட்டு பெரிய கற்களை எடுத்துவரச் செய்த பேராசிரியர் அவற்றையும் மேஜையி‎ன்மீது வைக்கிறார். பி‎ன், கற்களை ஒவ்வொ‌‎ன்றாகஎடுத்து ஜாடிக்குள் போட ஆரம்பிக்கிறார்.


ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக்கேட்கிறார், ''ஜாடி நிறைந்து விட்டதா?''


அனைத்து மாணவர்களும் கோரஸாக, ''யெஸ்..ஸார்!''


சலனமில்லாமல் ''நல்லது'' எ‎ன்ற பேராசிரியர், பி‎ன்சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வரச் செய்தார். அவற்றை ஒவ்வொ‎ன்றாக எடுத்து ஜாடியினுள் போடஆரம்பித்தார். பெரிய கற்களி‎ன் இடைவெளிகளில் ஜல்லிக்கற்கள் நுழைந்தன. ஜாடியைக் குலுக்கி விட, ஜல்லிகள் கிடைத்த இடைவெளிகளை ஆக்கிரமிப்புசெய்தன.


ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக்கேட்கிறார். ''ஜாடி நிறைந்து விட்டதா?''


வகுப்பறையில் நிசப்தம். ஒரு மாணவர் மட்டும்''அப்படி நிச்சயமாக சொல்லிவிட முடியாது'' எ‎ன்றார்.


மெல்லிய பு‎ன்னகையுடன் ''நல்லது'' எ‎ன்றபேராசிரியர், பி‎ன் ஒரு வாளி நிறைய ஆற்றுமணலைக் கொண்டு வரச் செய்தார். மணலைகொஞ்சம் கொஞ்சமாக அள்ளிப் போடப் போட,கிடைத்த இடைவெளிகளில் மணல் ஆக்கிரமிப்புசெய்ய ஆரம்பித்தது. ஜாடியைக் குலுக்கி விட, மேலும்மணலை அள்ளிப் போட முடிந்தது.


ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக்கேட்கிறார். ''ஜாடி நிறைந்து விட்டதா?''


இப்பொழுது, வகுப்பறை முழுவதும் கோரஸாக, ''நிச்சயமாக ‏இல்லை!'' 


சிரித்த பேராசிரியர் ''நல்லது'' எ‎ன்றவாறே, ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டு வரச் செய்தார்.தண்ணீரை ஊற்ற ஊற்ற மணலைக் கரைத்துக்கொண்டு தண்ணீர் நிறைந்தது ஜாடியினுள்.


ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துச்பேச ஆரம்பிக்கிறார் பேராசிரியர். ''ஜாடி நிறைந்துவிட்டதா எ‎ன்று ‏இப்போது நான் கேட்கப்போவதில்லை. ‏இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டபாடம் எ‎ன்ன?''


ஒரு மாணவர் எழுந்தார். ''நமது நேர நிர்வாகம் எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள்செய்கிறோம் எ‎ன்பதல்ல; எவ்வளவு வேலை செய்துகொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள்மேலும் சில சிறிய வேலைகளையும் முடிக்க முடியும்''


''இல்லை.. அதுவல்ல பாடம்'' பேராசிரியர்பதிலுரைத்தார்:


''பெரிய கற்களை நீங்கள் முதலில் ஜாடிக்குள்போடாவிடில், பி‎ன்னர் எப்போதுமே அவற்றை நீங்கள்போட முடியாது; ஜல்லிகளும் மணற்துகள்களும் அடைத்துக் கொண்டிருக்கும். வாழ்க்கையை ஒரு ஜாடியாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பெரியகற்கள் எ‎ன்பவை இ‏ங்கே உங்கள் அ‎ன்பிற்குரியவர்களை, உங்கள் த‎ன்னம்பிக்கையை, உங்கள் கல்வியை, உங்கள் எதிர்காலக் கனவுகளை, குறிக்கோள்களைக் குறிக்கி‎ன்றன. இவற்றை அந்தந்தக் கால நேரங்களில் சரியாக உள்ளிடாவிட்டால் பி‎ன்னர் அவற்றை உள்ளிடமுடியாது. விளைவு?''


ஆகவே, ‏இன்று வீட்டுக்குச் செல்லுங்கள். ந‎ன்றாகத்தூங்குங்கள். காலையில் எழுந்து உங்களை நீங்களேகேட்டுக் கொள்ளுங்கள், 


'பெரிய கற்கள் என்பவை எ‎ன் வாழ்க்கையில் யாவை...'


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இப்படித்தான் நம் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள்.

  "மினிமலிஸம் "... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை !  - எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார். வீட்ல மூணு பசங்க, மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல.. . இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட்  என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது. அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்; மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர் தான் ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும். 2009

ஒரு குழந்தையின் ஆசை 🧑‍🎨

 ஒரு குழந்தையின் ஆசை...  - "நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா." அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார். நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது. என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது.  அவர் ஒரு அற்புதமான கதை சொல்லி, அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார். காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார். அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர்.  விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார். அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்.. சிந்திக்கவும் வைப்பார். அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார். ஆனந்தத்தில் மிதக்க வைப்பார்.அ