முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறிவின் வெளிச்சத்தால், அதைக் தேடிக் கண்டுபிடித்து விட்டேன்”

 

எங்கே நிம்மதி...?   - ஒரு மனிதன், எந்தக் குறையும் இல்லை அவனுக்கு. ஆனாலும், மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை, சிரமப்பட்டான். அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள். “பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு… அங்கே ஒரு பெரியவர் இருக்கார்… போய்ப் பாருங்கள்!”ஆசிரமத்துக்குப் போனான்…பெரியவரைப் பார்த்தான். “ஐயா… மனசுலே நிம்மதி இல்லே… படுத்தா தூங்க முடியலே!”அவர் நிமிர்ந்து பார்த்தார், “தம்பி… உன் நிலைமை எனக்குப் புரியுது… இப்படி வந்து உட்கார்!”பிறகு அவர் சொன்னார்:“உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது… 





தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!”“அது எப்படிங்க?”“சொல்றேன்…அது மட்டுமல்ல… மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்!”“ஐயா… நீங்க சொல்றது எனக்கு புரியலே!’“புரியவைக்கிறேன்… அதற்கு முன் ஆசரமத்தில் விருந்து சாப்பிடு.”வயிறு நிறையச் சாப்பிட்டான்...பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, “இதில் படுத்துக்கொள்” என்றார்.படுத்துக் கொண்டான்…பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்…கதை இதுதான்:ரயில் புறப்படப் போகிறது, அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான்… அவன் தலையில் ஒரு மூட்டை… ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான்.ரயில் புறப்பட்டது…தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை…எதிரே இருந்தவர் கேட்கிறார்: “ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே? இறக்கி வையேன்!”அவன் சொல்கிறான்:“வேணாங்க! ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்! என் சுமையை நான் சுமந்துக்குவேன்!’பெரியவர் கதையை முடித்தார். படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.“ஏன் சிரிக்கிறே?”“பைத்தியக்காரனா இருக்கானே…ரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா?” “அது அவனுக்கு தெரிய வில்லையே” “யார் அவன்?”-இயல்பாக கேட்டான்“நீதான்!”“என்ன சொல்றீங்க?”பெரியவர் சொன்னார்:“வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் பயணம் மாதிரிதான். பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள் நிம்மதியாக வாழமுடியாது. தேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்!”அவனுக்கு தனது குறை மெல்லப் புரிய ஆரம்பித்தது…சுகமாக தூக்கம் வந்தது. தூங்க ஆரம்பித்து விட்டான்… கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார்.“எழுந்திரு” என்றார் எழுந்தான்! “அந்த தலையணையைத் தூக்கு!” என்றார்.தூக்கினான்…அடுத்த கணம் “ஆ” வென்று அலறினான். தலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு, சுருண்டு படுத்திருந்தது.“ஐயா! என்ன இது?”“உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு… அப்படி இருந்தும் நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்…!அது … அது எனக்குத் தெரியாது… “பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது… அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்!”அவன் புறப்பட்டான்,, “நன்றி பெரியவரே… நான் போய் வருகிறேன்!”“நிம்மதி எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாயா?“புரிந்து கொண்டேன்!” என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது.“அறிவின் வெளிச்சத்தால், அதைக் தேடிக் கண்டுபிடித்து விட்டேன்”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இப்படித்தான் நம் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள்.

  "மினிமலிஸம் "... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை !  - எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார். வீட்ல மூணு பசங்க, மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல.. . இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட்  என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது. அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்; மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர் தான் ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும். 2009

பெரிய கற்கள்

  பெரிய கற்கள்...  - வகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப்பாடங்கள் எடுக்க வந்த ஒரு பேராசிரியர். ''மாணவர்களே, இன்று நாம் செய்முறைவிளக்கத்துட‎ன் ஒரு பாடத்தைக் கற்போம்.'' வாய்ப்புறம் அகலமாய் இருந்த, ஒளி ஊடுருவக்கூடிய ஒரு பெரிய பிளாஸ்டிக் ஜாடியை எடுத்து வரச்செய்தார் பேராசிரியர். ஜாடி ஒரு மேஜையி‎ன் மீதுவைக்கப்படுகிறது. ஏழெட்டு பெரிய கற்களை எடுத்துவரச் செய்த பேராசிரியர் அவற்றையும் மேஜையி‎ன்மீது வைக்கிறார். பி‎ன், கற்களை ஒவ்வொ‌‎ன்றாகஎடுத்து ஜாடிக்குள் போட ஆரம்பிக்கிறார். ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக்கேட்கிறார், ''ஜாடி நிறைந்து விட்டதா?'' அனைத்து மாணவர்களும் கோரஸாக, ''யெஸ்..ஸார்!'' சலனமில்லாமல் ''நல்லது'' எ‎ன்ற பேராசிரியர், பி‎ன்சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வரச் செய்தார். அவற்றை ஒவ்வொ‎ன்றாக எடுத்து ஜாடியினுள் போடஆரம்பித்தார். பெரிய கற்களி‎ன் இடைவெளிகளில் ஜல்லிக்கற்கள் நுழைந்தன. ஜாடியைக் குலுக்கி விட, ஜல்லிகள் கிடைத்த இடைவெளிகளை ஆக்கிரமிப்புசெய்தன. ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக்கேட்கிறார். ''ஜாடி நிறைந்

ஒரு குழந்தையின் ஆசை 🧑‍🎨

 ஒரு குழந்தையின் ஆசை...  - "நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா." அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார். நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது. என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது.  அவர் ஒரு அற்புதமான கதை சொல்லி, அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார். காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார். அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர்.  விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார். அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்.. சிந்திக்கவும் வைப்பார். அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார். ஆனந்தத்தில் மிதக்க வைப்பார்.அ