முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

.யார் காரணம் ?💣💌

 

யார் காரணம் ?  - காலை உணவை குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மகள் தேனீர்க் கோப்பையைத் தவறுதலாகத் தட்டிவிட, அதிலிருந்த தேனீர் நீங்கள் அலுவலகம் செல்ல அணிந்திருந்த உடையை அசிங்கப்படுத்திவிடுகிறது.இந்தச் சம்பவத்தின் மீது உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால், அடுத்து நடக்கப் போவது என்ன என்பதனைத் தீர்மானிப்பது, நீங்கள் எவ்வாறு பதில் நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பதில்தான் தங்கியுள்ளது.நீங்கள் திட்டுகிறீர்கள். தேனீர் கோப்பையைத் தட்டிவிட்டதற்காக உங்கள் மகளைக் கடுமையாகத் திட்டித் தீர்க்கிறீர்கள்.




 மகள் அழத் தொடங்குவாள். அடுத்ததாக, தேனீர்க் கோப்பையை மேசையின் ஓரத்தில் வைத்ததற்காக உங்கள் மனைவி மீது பழியைப் போடுகிறீர்கள். அதனைத் தொடர்ந்து ஒரு சிறிய வாய் யுத்தம்.கோபத்தோடு மாடிக்குச் சென்று வேறு உடையை அணிந்து வருகிறீர்கள். அங்கே நீங்கள் உங்கள் மகள் அழுது கொண்டே காலையுணவை முடித்து, பாடசாலை செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருப்பதைக் காண்கிறீர்கள். சற்று முன் நடந்த நிகழ்வினால் உங்கள் மகள் பேருந்தைத் தவறவிட்டு விடுகிறாள். உங்கள் மனைவியும் உடனடியாக அலுவலகத்திற்குப் போக வேண்டும். ஆகவே, அவசர அவசரமாக மகளை காரில் ஏற்றிக் கொண்டு பாடசாலை நோக்கி விரைகிறீர்கள். தாமதித்தினால், 30 மைல் வேகத்தில் பயணிக்க வேண்டிய வீதியில் 40 மைல் வேகத்தில் பயணிக்கிறீர்கள். 15 நிமிட தாமதம் மற்றும் வேகமாக வாகனத்தை செலுத்தியதற்காக அபராத தொகையையும் செலுத்திவிட்டு பாடசாலையை அடைகிறீர்கள்.‘போய் வருகிறேன்’ என்று கூடச் சொல்லாமல் உங்கள் மகள் பாடசாலைக்குள் ஓடிவிட்டாள்.20 நிமிட தாமதத்திற்குப் பின் அலுவலகத்திற்கு போய்ச்சேர்கிறீர்கள். அப்போதுதான் உணர்கிறீர்கள்  பிரீஃப்கேஸை அவசரத்தில் எடுத்து வர மறந்து விட்டதை. அன்றைய தினத்தின் தொடக்கமே குழப்பமாகிவிட்டது. மேலும் மேலும் அது மேசமடைந்து கொண்டே போகிறது.அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் செல்கிறீர்கள்...வீடு வந்தடைந்தவுடன் உங்களுக்கும் உங்கள் மனைவி, மகளுக்குமிடையேயான உறவில் சற்று விரிசலை உணர்கிறீர்கள்.ஏன்? காரணம், காலையில் நீங்கள் நடந்து கொண்ட விதம்.இந்த நாள் இப்படி குழப்பமாக போனதற்கு காரணம் என்ன?அ) அந்த கோப்பைத் தேனீரா?ஆ) அதற்கு காரணமான உங்கள் மகளா?இ) அபராதம் விதித்த போலீஸ்காரனா?ஈ) நீங்களா?சரியான விடை: “ஈ”அந்தத் தேனீர் சிந்தியதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் தேனீர் சிந்திய அடுத்த ஐந்து வினாடிகளில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான் காரணம்.நீங்கள் இவ்வாறுதான் நடந்து கொண்டிருக்க வேண்டும்:தேனீர் உங்கள் மீது படுகிறது. உங்கள் மகள் அழப் போகிறாள். நீங்கள் அன்பான குரலில், ‘பரவாயில்லை, அடுத்த முறை கவனமாக நடந்து கொள் செல்லமே!’சிந்திய தேனீரை டவலால் துடைத்தபடி மாடிக்கு விரைகிறீர்கள். மாடியிலிருந்து உடையை மாற்றிக் கொண்டு பிரீப்கேஸையும் எடுத்துக் கொண்டு இறங்கி வரும்போது ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள். அங்கே, உங்களை நோக்கிக் கையசைத்து விடை பெற்றவாறே உங்கள் மகள் பாடசாலை பேருந்தில் ஏறுவதைக் காண்கிறீர்கள். 5 நிமிடம் முன்னதாகவே அலுவலகம் வந்தடைந்து அலுவலக நண்பர்களுடன் காலை வணக்கத்தை பரிமாறிக் கொள்கிறீர்கள்.வித்தியாசங்களைப் பார்த்தீர்களா?இரண்டு விதமான நிகழ்ச்சிகள். இரண்டும் ஒரே மாதிரித் தொடங்கின. வெவ்வேறு விதமாக முடிந்தன.ஏன்? ஏனென்றால், நீங்கள் நிகழ்வுகளை எதிர்கொண்ட விதம்.உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் 10% சம்பவங்களில் உங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. 90%ம் எப்படி நீங்கள் நடந்து கொள்கின்றீர்கள் என்பதில்தான் தங்கியுள்ளது.யார் காரணம் ?💣💌

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இப்படித்தான் நம் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள்.

  "மினிமலிஸம் "... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை !  - எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார். வீட்ல மூணு பசங்க, மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல.. . இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட்  என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது. அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்; மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர் தான் ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும். 2009

பெரிய கற்கள்

  பெரிய கற்கள்...  - வகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப்பாடங்கள் எடுக்க வந்த ஒரு பேராசிரியர். ''மாணவர்களே, இன்று நாம் செய்முறைவிளக்கத்துட‎ன் ஒரு பாடத்தைக் கற்போம்.'' வாய்ப்புறம் அகலமாய் இருந்த, ஒளி ஊடுருவக்கூடிய ஒரு பெரிய பிளாஸ்டிக் ஜாடியை எடுத்து வரச்செய்தார் பேராசிரியர். ஜாடி ஒரு மேஜையி‎ன் மீதுவைக்கப்படுகிறது. ஏழெட்டு பெரிய கற்களை எடுத்துவரச் செய்த பேராசிரியர் அவற்றையும் மேஜையி‎ன்மீது வைக்கிறார். பி‎ன், கற்களை ஒவ்வொ‌‎ன்றாகஎடுத்து ஜாடிக்குள் போட ஆரம்பிக்கிறார். ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக்கேட்கிறார், ''ஜாடி நிறைந்து விட்டதா?'' அனைத்து மாணவர்களும் கோரஸாக, ''யெஸ்..ஸார்!'' சலனமில்லாமல் ''நல்லது'' எ‎ன்ற பேராசிரியர், பி‎ன்சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வரச் செய்தார். அவற்றை ஒவ்வொ‎ன்றாக எடுத்து ஜாடியினுள் போடஆரம்பித்தார். பெரிய கற்களி‎ன் இடைவெளிகளில் ஜல்லிக்கற்கள் நுழைந்தன. ஜாடியைக் குலுக்கி விட, ஜல்லிகள் கிடைத்த இடைவெளிகளை ஆக்கிரமிப்புசெய்தன. ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக்கேட்கிறார். ''ஜாடி நிறைந்

ஒரு குழந்தையின் ஆசை 🧑‍🎨

 ஒரு குழந்தையின் ஆசை...  - "நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா." அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார். நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது. என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது.  அவர் ஒரு அற்புதமான கதை சொல்லி, அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார். காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார். அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர்.  விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார். அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்.. சிந்திக்கவும் வைப்பார். அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார். ஆனந்தத்தில் மிதக்க வைப்பார்.அ