முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை அழகாக மாறும் !!”

 

அனைத்து சிக்கலுக்கும் ஒரே வைத்தியம்..  - அப்பாவிடம் எல்லாவற்றிற்குமே ஒரே வைத்தியம் தான் இருக்கும். உங்களுக்கு எவ்வளவு பெரிய வியாதியாக இருந்தாலும் அவர் இதைத்தான் சொல்வார். இதை மட்டும்தான் சொல்வார்."தலகாணி இல்லாம வெறும்தரைல படு, சரியாகிடும்"உலகின் அத்தனை வலிகளுக்கும் சர்வலோக நிவாரணி இந்த ஒன்றைத்தவிர வேறேதும் இல்லையென்பது அவரின் ஆணித்தரமான நம்பிக்கை. இதன் விசித்திரம் என்னவெனில் உடம்பிற்கு மட்டுமல்ல, மனதிற்குமான வைத்தியமாகவும் அவர் இதைத்தான் பரிந்துரைப்பார்.மனைவியை இழந்த எதிர்வீட்டு முதியவரின் புலம்பலுக்கு "வெறும் தரைல படுங்க, பாரம் குறையும்" என்று ஜஸ்ட் லைக் தட் அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது தான் இதை கவனிக்க ஆரம்பித்ததாக ஞாபகம்.பின்னொரு நாளில், கடன் தொல்லையென விரக்தியாய் புலம்பிய உறவினனுக்கு, வேலைப்பளுவென எரிந்து விழுந்த நண்பனுக்கு என பட்டியல் சன்னமாய் நீளும்.பின் எப்போதாவது "தலகாணி வேண்டாம் இந்துமா, கொஞ்ச நேரம் இப்டி படுத்துக்குறேன், அம்மாகிட்ட டீ போட சொல்லு" என்றபடி படுத்துக்கொள்வார். ஏதோ புரிந்ததுபோல் இருக்கும்."முதுகுவலி, தலைவலிக்குப் பரவாயில்ல, மனசு பாரத்துக்குக் கூடவா? வேடிக்கையா இல்லையாப்பா?"ஆர்வம் தாங்காமல் கேட்டதும் அவரிடமிருந்து மிக நிதானமாக பதில் வந்தது."தலைக்கு ஆதரவா எதையாவது தேடும்போதுதான் மனசு பலவீனப்படும், இந்துமா... யாராவது தொட்டு ஆசீர்வாதம் பண்ண மாட்டாங்களானு, யாராவது ஆறுதலா கோதிவிட மாட்டாங்களானு, யாராவது அழுறதுக்கு மடி தரமாட்டாங்களானு, யாராவது நான் இருக்கேன்னு சாய்ச்சுக்க மாட்டாங்களானு.. மனசு ஏங்கிக்கிடக்கும். எல்லாத்தையும் கொஞ்ச நேரம் தள்ளிவச்சுட்டு, வெறும் தரைல நிராதரவா, அநாதையா தலையை, அதாவது மனசை கொஞ்ச நேரம் வச்சுப்பாரு, அடுத்து என்னனு யோசிக்கத் தோணும். எப்படி வெளில வரலாம்னு சிந்தனை ஓடும். சரி, ரொம்ப நேரமாச்சுனு எழுந்து போக, அதாவது கடந்துபோகத் தோணும். தலகாணிங்குறது வெறும் பஞ்சு மட்டுமில்ல, நம்மை பலவீனப்படுத்துற வஸ்துவும் கூட. உடம்பை மட்டுமில்ல, மனசையும் காப்பாத்திக்குறது ரொம்ப முக்கியம்."என் அனுபவத்தில் சொல்றேன்...“எதையும் எதிர்பாராமல் வாழ்ந்து பாருங்க,வாழ்க்கை அழகாக மாறும் !!”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இப்படித்தான் நம் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள்.

  "மினிமலிஸம் "... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை !  - எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார். வீட்ல மூணு பசங்க, மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல.. . இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட்  என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது. அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்; மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர் தான் ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும். 2009

பெரிய கற்கள்

  பெரிய கற்கள்...  - வகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப்பாடங்கள் எடுக்க வந்த ஒரு பேராசிரியர். ''மாணவர்களே, இன்று நாம் செய்முறைவிளக்கத்துட‎ன் ஒரு பாடத்தைக் கற்போம்.'' வாய்ப்புறம் அகலமாய் இருந்த, ஒளி ஊடுருவக்கூடிய ஒரு பெரிய பிளாஸ்டிக் ஜாடியை எடுத்து வரச்செய்தார் பேராசிரியர். ஜாடி ஒரு மேஜையி‎ன் மீதுவைக்கப்படுகிறது. ஏழெட்டு பெரிய கற்களை எடுத்துவரச் செய்த பேராசிரியர் அவற்றையும் மேஜையி‎ன்மீது வைக்கிறார். பி‎ன், கற்களை ஒவ்வொ‌‎ன்றாகஎடுத்து ஜாடிக்குள் போட ஆரம்பிக்கிறார். ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக்கேட்கிறார், ''ஜாடி நிறைந்து விட்டதா?'' அனைத்து மாணவர்களும் கோரஸாக, ''யெஸ்..ஸார்!'' சலனமில்லாமல் ''நல்லது'' எ‎ன்ற பேராசிரியர், பி‎ன்சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வரச் செய்தார். அவற்றை ஒவ்வொ‎ன்றாக எடுத்து ஜாடியினுள் போடஆரம்பித்தார். பெரிய கற்களி‎ன் இடைவெளிகளில் ஜல்லிக்கற்கள் நுழைந்தன. ஜாடியைக் குலுக்கி விட, ஜல்லிகள் கிடைத்த இடைவெளிகளை ஆக்கிரமிப்புசெய்தன. ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக்கேட்கிறார். ''ஜாடி நிறைந்

ஒரு குழந்தையின் ஆசை 🧑‍🎨

 ஒரு குழந்தையின் ஆசை...  - "நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா." அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார். நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது. என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது.  அவர் ஒரு அற்புதமான கதை சொல்லி, அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார். காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார். அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர்.  விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார். அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்.. சிந்திக்கவும் வைப்பார். அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார். ஆனந்தத்தில் மிதக்க வைப்பார்.அ