பட்டாம்பூச்சி
சுமார் மூவாயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி திரிகின்றன.
இவற்றின் கால்கள் சுவை உணரிகளை கொண்டுள்ளன. இந்த சுவை உணரிகள் கால்களில் இருப்பதினால் அவை கால்களால் தான் சுவையை அறிகின்றன.
அந்த சுவை உணரிகள் மனிதன் சுவையை அறிய எவ்வாறு நாக்கு உதவுகிறதோ அது போலவே இருக்கின்றன. ஆனால் அது மனிதர்களுடைய நாக்கை விட 200 மடங்கு சக்தி கொண்டவை.
இந்த சுவை உணரிகளை கொண்டு முட்டையிடுவதற்கு முன்பு அவை முட்டையிடும் இடத்தில் ஏதாவது நச்சுகள் அல்லது அவற்றின் சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்கும் ஏதவாது பொருள்கள் இருக்கிறதா என்பதை சோதிக்க பயன்படுத்துகின்றன.
முழுமையாக வளர்ந்த பட்டாம்பூச்சிகள் சாப்பிடுவதில்லையாம். அவை தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்கின்றன. ஆனால் அவற்றின் கம்பளிப்பூச்சிகள் அதாவது கேட்டர் பில்லர்ஸ் உணவை தொடர்ந்து சாப்பிடுகின்றன.
கண்கள் 6,000 சிறிய லென்ஸ்கள் கொண்டிருக்கும்.
ஒரு பெண் பட்டாம்பூச்சி அதன் குழந்தைகள் ஒரு இலையை சாப்பிட ஆரம்பிக்கும் முன் அது தனது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா என்பதை அறிய அந்த இலையை சுவைத்து சோதனை செய்கிறது.
சோதனை செய்த பிறகு அதனுடைய கால்களுக்கு எந்த சேதமும் ஏற்படாவிட்டால் அந்த இலைகள் மூலம் தனது கம்பளிப்பூச்சிகளைப் பாதுகாப்பாக வளர்க்க முடியும் என்று அவைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கிறது.
பட்டாம் பூச்சி 🦋
மூட்டை பூச்சி
100 நாட்களுக்கு மேலாக பசியை தாங்கிக் கொண்டு உயிரோடு இருக்கும் வல்லமை படைத்தவை.
இதன் ஓரே உணவு நமது இரத்தம் மட்டுமே.
இந்த பூச்சிகள் பறக்காது.
ஒருவரை கடிக்கும் போது, அவை ‘சாலிவா’ என்ற திரவத்தை நம்மில் செலுத்துகின்றன. அதனால், சிறிது நேரம் அப்பகுதி மட்டும் உணர்வற்று போய்விடுகிறது. அந்த நேரத்தில் அவைகள் ரத்ததை உறிஞ்சி எடுத்து விடுகின்றன.
அவை 0 டிகிரி குளிர் நிலவினாலும், 122 டிகிரிவெப்பநிலை நிலவினாலும் உயிரோடு இருக்கும் ஆற்றல் பெற்றவை.
இரவில் நாம் வெளியிடும் கார்பன்–டை–ஆக்சைடு வாயுவால் ஈர்க்கப்பட்டு ரத்தம் குடிப்பதற்காக வெளியே வருகிறது.
மூட்டைப்பூச்சி
கருத்துகள்
கருத்துரையிடுக