பீர்க்கங்காய்

 

பீர்கங்காய்இதனை யாரும் இரவில் சாப்பிடக்கூடாது.இருமல் சளி தலைவலி போன்ற உபாதைகள் இருந்தால் இதனை சாப்பிடக்கூடாது காரணம் தலையில் நீர் கோத்துக் கொள்ளும்இதில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த காய் என்பதால் வாங்கிய உடனே சமைத்து சாப்பிடுவது நல்லது. அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் உபயோகித்து விட வேண்டும்.இதை வாங்கும்போது தோல்களில் வெடிப்பு அல்லது நிறம் மாறிப் போயிருந்தால் வாங்க வேண்டாம்.இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலுக்கும் மூல நோய்க்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.


அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றில் அமில சுரப்பு அதிகமாவதை தடுக்கும். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.தோல் சம்பந்தமான அனைத்து கோளாறுகளுக்கும் நல்ல தீர்வை கொடுக்கக் கூடியது.சிறுநீரக கோளாறுகளுக்கு நன்கு முற்றிய பீர்க்கங்காயை பயன்படுத்தப்படுகிறது.இதில் இருக்கும் வைட்டமின்கள் தோல் நோய்களையும் மற்றும் நீரழிவு நோய்களையும் குணப்படுத்துவதில் உதவுகின்றன.இதை உணவில் எடுத்து கொள்ள அதிக படியான காய்ச்சல், சளி தொல்லை, இருமலால் அவதி படுவோருக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.ரத்த சோகையில் இருந்து விடுபட இதை சாப்பிடலாம்.மண்ணீரலில் ஏற்படும் புண்களை குணப்படுத்த இதன் சாற்றை அதில் போடுவதன் மூலம் விரைவில் குணம் அடையும்.உடலில் இருக்கும் எண்ணெய் சருமத்திற்கு இதனை பயன்படுத்த நல்லது. இதில் அடங்கி இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது.


அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.மஞ்சள் காமாலை நோய்க்கு இதன் சாறு மருந்தாகப் பயன்படுகிறது.நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.இதை கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் மாதவிடாய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளுக்கு பயன்படும்.பீர்க்கங்காய் 

கருத்துகள்