பசு மாடு🐄

 

பசுபசு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்க வல்லது.ஒரு நாளில் 10 – 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும்.சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும்.தினமும் 10 முதல் 12 மணி நேரத்தை தரையில் படுத்து கழிக்கின்றன.ஒரு நாளில் 6 – 7 மணி நேரம் இரை உண்ணவும் 7 – 8 மணி நேரம் அதனை அசை போடவும் பசுவுக்குத் தேவை.அசை போடும் போது நிமிடத்திற்கு சுமார் 40 – 50 முறை தாடையை அசைக்க வேண்டி வருகிறது. 



இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது.ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 – 12 லிட்டர் சிறுநீரும் 15 – 20 கிலோ சாணியும் வெளி யேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் இது அதிகமாகும்.ஒரு நாளில் சுமார் 100 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வல்லது.


இவை பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகின்றது.நுகருணர்வு மிகவும் கூர்மை யானது. சுமார் 6 – 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும்.கறக்கும் பசு மாடு நாளுக்கு சுமார் 40 – 50 லிட்டர் உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பயன்படுகிறது.மாடுகளால் சிவப்பு வண்ணத்தை பார்க்க முடியாது. ஆனால் சிவப்பு நிறமுடைய பொருள் நகர்ந்தால், அதை அசையும் பொருட்களாக பசுக்கள் காண்கின்றன.ஒரு வயிறுதான் உண்டு. ஆனால் அதில் உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன.கண்கள் முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத் தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது.இதன் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி ஃபாரன்ஹீட்.பசு மாடு 

கருத்துகள்