அணில்1 மணி நேரத்தில் 20 மைல் தூரத்தை கடக்க முடியும்.அணிலால் உடல் நீளத்தைப் போல 10 மடங்கு தூரத்திற்கு குதிக்க முடியும்.பொதுவாக மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.புதிதாக பிறந்த அணில் குட்டி ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும்.30 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும் அதற்கு எந்த காயமும் ஏற்படாது. கீழே குதிக்கும் பொழுதும் விழும் பொழுதும் தன்னுடைய வாலை சமநிலையில் பாராசூட்டை போல வைத்துக் கொள்ளும்.
இதனால் எந்த காயமும் ஏற்படாது.மரத்தில் இருந்து எடுக்கும் பழ கொட்டைகளை எல்லாம் பிறகு சாப்பிடுவதற்காக ஒளித்து வைத்திருக்கும். ஆனால் இதில் 30 சதவிகிதத்தை மட்டுமே திரும்ப எடுக்கும். மீதி 70 சதவிகிதத்தை மறந்து விடும்.இதனால் 180 டிகிரி தொலைவு வரை ரொம்ப ஈஸியாக பார்க்க முடியுமாம். பின்னாடி நடக்குற விஷயங்களை கூட ரொம்ப ஈஸியாக பார்க்க முடியும். ஆனால் பிறந்த உடனே அணில்களுக்கு கண் பார்வை இருக்காது.
ஆபத்து ஏற்படும் போது மற்றவர்களை எச்சரிக்க தன்னுடைய வாலை பயன்படுத்துகிறது.
⬇️தவளைஇவை வாய் மூலம் நீரை அருந்துவதில்லை.உடல் நீளத்தை விட 20 மடங்கு அதிகமாக குதிக்கும்.இவற்றிற்க்கு நுரையீரல்கள் உண்டு. ஆனால் விலா எலும்புகள் கிடையாது. அதன் காரணமாக மார்பை விரியவும் சுருங்கவும் செய்து காற்றை உள்ளே இழுக்கவும் வெளியே விடவும் முடியாது.நிலத்தில் இருக்கும் போது தனது மூக்குத் துவாரங்கள் மூலம்தான் சுவாசிக்கிறது. அதில் ஒரு வாழ்வு அமைந்துள்ளது.தொண்டை தசைகள் துடிக்க வைப்பதன் மூலம் காற்றை உள்ளிழுக்கவும் வெளியேற்றவும் செய்கின்றது.நிமிடத்திற்கு 120 முதல் 140 துடிப்புகள் வரை இருக்கும்.நிலத்தில் இருக்கும் போது அதன் சருமம் நுரையீரல்களை விட சுவாசிப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது.சருமம் ஈரமாக இருந்தால் தான் காற்றை கிரகித்துக் கொள்ள முடியும். சருமம் எப்போதும் ஈரமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்படி செய்ய அது ஒரு சளிப்பொருளை சுரக்கிறது. சருமம் காற்றையும் நீரையும் கிரகித்துக் கொள்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக